Message: #3 2024-05-18
கரடு முரடானது தான் வாழ்க்கை,
அதில் காட்டாறுகள் பலப்பல,
நீ ஏன் இன்னும் ஓடவில்லை,
அதற்கு என்னிடம் பதில் இல்லை,
ஆனால் எங்கோ ஒருவன் இசைக்கிறான்,
நாமெல்லாம் அதைப் பற்றிக் கொண்டு,
ஓடிக்கொண்டு இருக்கிறோம் என்ப்து உண்மையே! |
Message: #2 2024-05-18
மனதில் உறுதி வேண்டும்-Manathil uruthi vendum-பாரதியார்
மனதில் உறுதி வேண்டும்,
வாக்கினிலே இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்படவேண்டும்;
கனவு மெய்ப்படவேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்;
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தில் உறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண் பயனுற வேண்டும்.
வானமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்!
ஓம்,ஓம், ஓம். |